கும்பகோணம் அருகே பால்பண்ணைகளில் போதிய உணவின்றி தவிக்‍கும் மாடுகள் அடுத்தடுத்து இறந்து வருவதால் தொழிலாளர்கள் வேதனை

Jul 24 2021 4:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணம் அருகே பால்பண்ணைகளில் போதிய உணவின்றி மாடுகள் அடுத்டுத்து இறந்து வருவதாக அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கும்பகோணம் அருகே துறையூரில் இரண்டு மாட்டுப் பண்ணைகளும், மேலகொற்கையில் ஒரு மாட்டு பண்ணையும் உள்ளது. இங்கு 400 பசுமாடுகளும், 50-க்கும் மேற்பட்ட கன்றுகளும் பராமரிக்கப்படுகின்றன. ஹெலிக்காப்டர் நிறுவன சகோதரர்கள் கணேஷ், சுவாமிநாதனுக்‍குச் சொந்தமான இந்தப் பண்ணைகளில், நாளொன்றுக்‍கு சுமார் 300 லிட்டர் பால் கறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பண்ணைகளில் சுமார் 30 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நிதி நிறுவன மோசடி விவகாரத்தில், சகோதரர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதால், இந்தப் பால் பண்ணைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் கிடைக்‍காமலும், மாடுகள் உணவின்றியும் தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மாடுகளுக்கு இன்னும் 2 தினங்களுக்கு தேவையான அளவுக்‍கே உணவு இருப்பதால், அவற்றை காப்பாற்ற வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00