பெரம்பலூரில் முன்னாள் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வீட்டில் ரெய்டு : ரூ.4 கோடி ஆவணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

Jul 24 2021 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரம்பலூரில் முன்னாள் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையின்போது, 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரம்பலூர் நான்கு ரோடு அருகேயுள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், நகர உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து வந்தவர் மாணிக்கம். இவர், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் பெரம்பலூர் அவ்வையார் தெருவில் வசிக்கும் சரவணன் என்பவரது வீட்டின் முன்பு உள்ள மின்கம்பியை மாற்றி அமைக்க அவரிடம், ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு, துறைரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் ஆய்வு மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி பெரம்பலூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து, மாணிக்கத்தின் மீது கடந்த ஜனவரி 13-ம் தேதி, சொத்துகுவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுபடி லஞ்ச ஒழிப்புத் துறையினர், இரு குழுவாக பிரிந்து மாணிக்கத்தின் வீட்டிலும், வெண்பாவூரில் உள்ள அவரது தாயார் வீட்டிலும் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00