கன்னியாகுமரியில் நடந்த கோஷ்டி மோதலில் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த இளைஞர் சென்னை விமான நிலையத்தில் கைது
Jul 24 2021 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரியில் நடந்த கோஷ்டி மோதலில், 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த இளைஞர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
குவைத்திலிருந்து தனியார் சிறப்பு விமானம் ஒன்று நேற்றிரவு சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கன்னியாகுமரியைச் சோ்ந்த தாதீயூஸ் என்பவரின் பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்தபோது, அவர் கன்னியாகுமரி போலீசாரால், 8 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது. மேலும் இவா் மீது 2013 ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஒரு கோஷ்டி மோதலில், கொலை மிரட்டல், அடிதடி சண்டை போன்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து தாதீயூஸ்சை குடியுரிமை அலுவலகத்தில் தனி அறையில் அடைத்து வைத்தனா். கோஷ்டி மோதல் வழக்கில் போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு, தகவல் தெரிவித்தனர்.