சீர்காழியில் 300 கிலோ எடை கொண்ட மத்தி மீன்கள் பறிமுதல்
Jul 24 2021 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 300 கிலோ எடை கொண்ட மத்தி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சீர்காழி, திருமுல்லைவாசல், பூம்புகார் உள்ளிட்ட இடங்களில், சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, மீன் வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு போலீசார், வருவாய்த் துறையினர் கடலோர மீனவ கிராமங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், சீர்காழி அருகே வானகிரி கிராமத்தில் தடை செய்யப்பட்ட வலையில் பிடிக்கப்பட்ட 300 கிலோ எடை கொண்ட மத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.