மணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு
Jul 24 2021 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுகவினரின் ஜேசிபி, டிப்பர் லாரி உள்ளிட்டவை 2 யூனிட் மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டன. ஜேசிபி ஓட்டுனர் பால்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், மணல் கடத்தலில் தொடர்புடைய இடையப்பட்டி திமுக ஒன்றிய கவுன்சிலர் கலைச்சல்வியின் கணவர், திமுக பிரமுகருமான நாகராஜ் மற்றும் ஜேசிபி, டிப்பர் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.