கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை - முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
Jul 24 2021 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு விடிய, விடிய பெய்த மழையால் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் உள்ளிட்ட முக்கிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.