கனமழையால் மண்சரிவு - உடுமலை, மூணாறு போக்குவரத்து துண்டிப்பு
Jul 24 2021 3:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மூணாறு பகுதியில் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உடுமலை-மூணாறு சாலை 2-வது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மறையூரை அடுத்த மூணாறு பகுதியில் காலையில் இருந்து தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் உடுமலை- மூணாறு சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து உள்ளதால் உடுமலை மூணாறு சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.