மேற்குத் தொடர்ச்சிமலைப்பகுதியில் பலத்த மழை - குற்றால அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப் பெருக்கு

Jul 24 2021 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குத் தொடர்ச்சிமலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 143 அடி கொள்ளளவுக் கொண்ட பாபநாசம் அணை இன்று காலையில் 110 புள்ளி 20 அடியாக உயர்ந்துள்ளது. 156 அடி கொள்ளளவுக் கொண்ட சேர்வலாறு அணை, 117 புள்ளி 45 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு, நம்பியாறு, வடக்குபச்சையாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேற்று மழை பெய்த கனமழை காரணமாக, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றால மெயின் அருவியில் 2-வது நாளாக இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றால மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் விழுகிறது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளுக்கு இன்று காலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00