சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - மதுரை அருகே போலீசார் கைது செய்தனர்
Jul 24 2021 11:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார்.
அருமனையில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜார்ஜ் பொன்னையா, இந்து கடவுள், மதம் குறித்தும், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனால், அவர் மீது பா.ஜ.க. மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர். இதனடிப்படையில் தனிப்படை அமைத்து, தலைமறைவான பாதிரியாரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாதிரியார் பொன்னையாவை மதுரை அருகே கள்ளிக்குடி என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர்.