வாகன கழிவுகளை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட அழகிய சிற்பங்கள் : மெரினா கடற்கரையை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதியில் வைக்க திட்டம்
Jul 24 2021 10:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாகன கழிவுகளை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட அழகிய சிற்பங்கள், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.
தலைமை செயலகம் எதிரே உள்ள பூங்காவில், படகுடன் கூடிய மீனவர் சிலையும், மாநில கல்லூரி எதிரில் நண்டு சிற்பமும், விவேகானந்தர் இல்லம் எதிரில் இறால் சிற்பமும், ராணி மேரி கல்லூரி எதிரில் சுறாமீன் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சென்னை விமான நிலையம், பெசன்ட் நகர் கடற்கரை, கோயம்பேடு உள்பட சென்னையின் 15 இடங்களில் சிற்பங்கள் வைக்கப்பட உள்ளன.