தமிழகத்தில் 1,830 பேருக்கு கொரோனா தொற்று : வைரஸ் பாதிப்பால் 24 பேர் உயிரிழப்பு
Jul 24 2021 10:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் 5-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலத்தில் ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வைரஸ் பாதிப்பால் 24 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 816 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் சூழலில், 2 ஆயிரத்து 516 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
கோவையில் ஒரே நாளில் 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 293 பேர், வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 268 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
ஈரோட்டில் 135 பேருக்கும், சென்னையில் 130 பேருக்கும், சேலத்தில் 110 பேருக்கும், தஞ்சையில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 96 பேருக்கும், திருப்பூரில் 92 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.