அமராவதி அணை நிரம்பியதை அடுத்து உபரி நீர் வெளியேற்றம் - கரையோர கிராமங்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
Jul 23 2021 8:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை நிரம்பியதை அடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, மறையூர், காந்தலூர் போன்ற பகுதிகளில் இடைவிடாமல் கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து காணப்படுகிறது. 90 அடி உயரம் கொண்ட அமரவதி அணையில் நீர் இருப்பு 87 அடியைக் கடந்ததால், அணையின் பாதுகாப்புக் கருதி விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கரையோர கிராமங்களான கொழுமம், குமாரலிங்கம், உத்தமபாளையம் உள்ளிட்ட சுமார் 50 கிராமங்களில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.