பெட்ரோல் பங்கு ஊழியர்களை கத்தியை காட்டிய மிரட்டிய அதிமுக நிர்வாகிகள் - சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரணை
Jul 23 2021 8:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கே.கே.நகரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அதிமுக கொடி கட்டிய காரில் வந்த நபர்கள் டீசல் போட்டுவிட்டு அங்கிருந்த ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கே.கே.நகர் அடுத்த நெசப்பாக்கத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கிற்கு அதிமுக கொடி கட்டிய காரில் வந்த நபர்கள், 40 லிட்டர் டீசல் போட்டுள்ளார். அங்கிருந்த ஊழியர் அதற்கு பணம் கேட்ட போது, காரில் இருந்தவர்கள் கத்தியை கட்டி மிரட்டியுள்ளனர். மேலும் பங்கு ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக பங்கு ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.