சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் - நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மரியாதை
Jul 23 2021 2:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவு தினத்தையொட்டி, பாப்பாரப்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில், மாவட்ட ஆட்சியர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட விடுதலைப் போராட்ட தலைவர்களில் ஒருவரான தியாகி சுப்பிரமணிய சிவா, கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனாரின் நண்பராவார். இவர், தனது இறுதிநாளில், தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் வாழ்ந்து வந்த நிலையில், பாரதபுரம் பகுதியில் கடந்த 1925-ம் ஆண்டு மறைந்தார். அவரது நினைவாக, பாப்பாரப்பட்டியில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் எழுப்பப்பட்டு, அவரது புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுப்பிரமணிய சிவாவின் 96-வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில், மாவட்ட ஆட்சியர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.