திருச்சி முக்கொம்பு அணையில் பெண் குழந்தையின் சடலம் மீட்பு
Jun 18 2021 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி முக்கொம்பு அணையில் பெண் குழந்தையின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்பு அணை வழியாக கல்லணைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், முக்கொம்பு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரில் தொப்புள் கொடியுடன் சடலமாக பெண் குழந்தையின் உடல் மிதந்து வந்தது. இதனை மீட்ட பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.