கரூரில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
Jun 18 2021 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் மாவட்ட ஆட்சியர் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கொரோனா தொற்று உள்ளதா என ஆய்வு செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கரூர் மாவட்ட ஆட்சியரான பிரபு சங்கர், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருப்பத்தூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கொரோனா தொற்று உள்ளதா என ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து சிவாயம் ஊராட்சி குப்பாச்சிபட்டி கிராமத்தில் உள்ள நியாய விலை கடையிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.