தஞ்சைக்கு வந்த காவிரி நீரை மலர் தூவி வரவேற்ற மக்கள்
Jun 18 2021 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சைக்கு வந்த காவிரி நீர் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக கடந்த 16-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர், தஞ்சை மனோஜிபட்டி பகுதியில் உள்ள கல்லணை கால்வாய்க்கு வந்ததை அடுத்து, பொதுமக்கள் மலர்கள் தூவியும், சூடம் ஏற்றியும் வரவேற்பு அளித்தனர்.