பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Jun 18 2021 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் புதிதாக பொறுப்பேற்ற கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள், நகராட்சி தூய்மை பயணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களின்றி வேலை செய்வதாகவும், அதே போன்று மருத்துவமனையிலும் உரிய சுகாதார வசதியும் இல்லை என குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.