தமிழகத்தில் நிலவும் கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? - அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை
Jun 18 2021 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21-ந்தேதி வரை அமலில் உள்ளது. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர், அதிகாரிகளுடன் நாளை ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஊரடங்கு நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து, மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.