திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழப்பு
Jun 18 2021 12:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் இருவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். எடப்பாளையம் பகுதியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவர்களான மோகன், கோகுல் ஆகிய இருவர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது மாயமாகினர். இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த கிராம மக்கள் சேற்றில் சிக்கிய சிறுவர்கள் இருவரை சடலமாக மீட்டனர்.