ஸ்ரீரங்கம் கொரோனா சிகிச்சை மையம் அருகே எரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் - முச்சுத் திணறல் ஏற்பட்டு நோயாளிகள் அவதி
May 15 2021 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி ஸ்ரீரங்கம் கொரோனா சிகிச்சை மையம் அருகே மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதால், அங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள யாத்ரி நிவாஸ் கட்டடத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தினமும் இம்மையத்தில் சேரும் நோயாளிகள், மருத்துவ குழுவினர் பயன்படுத்திய பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசங்கள். கையுறைகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகளும் யாத்ரி நிவாஸ் கட்டத்தின் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால் எழும்பும் புகையால் கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு முச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர். எனவே குடியிருப்பு பகுதி அருகே மருத்துவக்கழிவுகளை கொட்டு எரிப்பதை தவிர்த்து, மாற்று இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.