கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி அருகே கடற்கரை கிராமங்களுக்‍குள் புகுந்த கடல்நீர் - இருமாநில கடற்கரைச் சாலைகள் துண்டிப்பு

May 15 2021 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரபிக்‍கடலில் உருவாகியுள்ள டவ்தே புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி அருகே கடற்கரை கிராமங்களுக்‍குள் கடல்நீர் புகுந்துள்ள ஆக்‍ரோஷமான காட்சிகள் வைரலாகி வருகின்றன.

தென்கிழக்‍கு அரபிக்‍கடலில் உருவாகியுள்ள டவ்தே புயல், கேரள மாநிலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், டவ்தே புயல் காரணமாக, கேரள எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி அருகே பொழியூர், தெற்கு கொல்லங்கோடு ஆகிய கடற்கரை கிராமங்களுக்‍குள் கடல் நீர் புகுந்துள்ளது. இதனால், இரு மாநில கடற்கரைச் சாலைகள் துண்டிக்‍கப்பட்டுள்ளன.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணையிலிருந்து வினாடிக்‍கு 500 கன அடி உபரிநீர் திறக்‍கப்பட்டுள்ளது. கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00