நெல்லை மாவட்டம் களக்காடு அருகே விடிய விடிய பெய்த பலத்த மழை
May 15 2021 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே விடிய விடிய பெய்த பலத்த மழையால் 5 கிராமங்களில் பாலங்கள் சேதமடைந்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. நாங்குநேரி அருகே களக்காடு பகுதியில், விடிய விடிய கனமழை பெய்ததால், கால்வாயில் வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐந்து கிராமங்களில் தற்காலிக பாலம் உடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.