திருப்பூரில் ஒரு வீட்டில் இருந்த ஸ்டெபிலைசரில் திடீரென தீ விபத்து
May 15 2021 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில், ஒரு வீட்டில் இருந்த ஸ்டெபிலைசரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொங்கு நகர் 3வது வீதியில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவரது வீட்டில் இருந்த ஸ்டெபிலைசர் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.