தூத்துக்குடியில் பொருட்களை வாங்க சமூக இடைவெளியின்றி கூடிய மக்கள்
May 15 2021 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், தூத்துக்குடியில், பொருட்களை வாங்க, சமூக இடைவெளியின்றி மக்கள் கூடினர். பகல் 12 மணி வரை கடைகள் இயங்கிய நிலையில், இன்றுமுதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் காலை முதலே அதிகமாக காணப்பட்டது. நாளை முழு ஊரடங்கு காரணமாக, மக்கள் அதிக அளவில் சமூக இடைவெளியின்றி கூடியதால் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.