கரூரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிய 10 பேர் கைது - சுமார் 2,000 மதுபாட்டில்கள் பறிமுதல்
May 15 2021 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். சுமார் 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கரூரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதனை அடுத்து தகவலின் பேரில் சம்மந்தப்பட்ட இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 10 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக கரூர் மாவட்டம் அருகம்பாளையத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவருடைய வீட்டில் மட்டும் ஆயிரத்து 714 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.