மின் கணக்கீட்டாளர் செல்லாமலேயே வீட்டில் மின்சார மீட்டரில் பதிவாகி வந்த விவரங்களை சேகரிக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

May 7 2021 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் கணக்கீட்டாளர் செல்லாமலேயே ஒவ்வொரு வீட்டிலும் மின்சார மீட்டரில் பதிவாகி வந்த விவரங்களை நுகர்வோரின் செல்போனுக்கு குறுந்தகவல் வரும் வகையில் புதிய கருவி ஒன்றை கும்பகோண பொறியியல் கல்லூரி மாணவிகள் வடிவமைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சில பகுதிகளில் மின்சார பயனீட்டு அளவு கணக்கிட முடியாமல், கடந்த மாதங்களில் செலுத்தப்பட்ட அதே கட்டணத்தை மின் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில், புதிய கருவி ஒன்றை கும்பகோணம் அருகே கள்ளப்புலியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவிகள் வடிவ‌மைத்துள்ளனர். கணினியுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவியின் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது, எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் போன்ற விவரங்கள், நுகர்வோர் கைப்பேசிக்கு குறுந்தகவலாக வரும். மேலும், உரிய காலத்தில் கட்டணம் செலுத்தாத பயனீட்டாளர் மின் இணைப்பை துண்டிப்பது, கட்டணம் செலுத்தி விட்டால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்குவது, எந்த வீட்டில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களையும் இந்த கருவி மூலம் அறிய முடியும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00