உப்பளங்கள் உள்ள உவர் நிலத்தில் விவசாயம் - அதிக மகசூல் கண்டு தூத்துக்குடி விவசாயி சாதனை
May 1 2021 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உப்பளங்கள் உள்ள உவர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது என்ற கூற்றை பொய்யாக்கி, உப்பளங்கள் மிக அருகே உள்ள தன் நிலத்தில் விவசாயம் செய்துள்ள விவசாயி ஒருவர் அதிக மகசூல் கண்டு சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்ற விவசாயி, உப்பளம் அருகே உள்ள தனது நிலத்தில் நெல் விவசாயம் செய்து சாதனை படைத்துள்ளார். தனது உப்பளங்களில் பாத்தி அமைக்கும்போது, அந்த பாத்தியில் இருந்து உப்பு நீர் அருகில் உள்ள வயல் பகுதிக்கு சென்று விடாமல் இருக்கும் வகையில், மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் பாத்திகள் அமைத்துள்ளார். இதனால் உப்பு நீர் 10 அடி தூரத்தில் உள்ள வயல்வெளிக்கு செல்வதில்லை. உப்பளம் அருகே உள்ள தனது 3 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு அதிக மகசூல் பெற்று வருகிறார். உப்பளத்தின் அருகில் உள்ள வயல்வெளியைப் பார்க்கும் பலரும், சுதாகரின் சாதனையைக் கண்டு வியக்கின்றனர்.