புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் விளைநிலங்களை கையகப்படுத்தி அடுக்குமாடி கட்டடம் கட்ட எதிர்ப்பு
Apr 22 2021 4:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர், வடசாரிபட்டி கிராமத்தில், விளைநிலங்களை கையகப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. வடசாரிபட்டி கிராமத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுவீடுகளை இழந்தவர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகமாக விளைநிலங்கள் அமைந்துள்ளதால், இங்கு குடியிருப்புகள் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டடம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.