தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு அ.ம.மு.க. சார்பில் நீர்மோர், தர்பூசணி வழங்கல்
Apr 22 2021 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் அ.ம.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு, 13வது நாளாக இன்று, பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், பழங்கள் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம், கிருமிநாசினிகள் வழங்கப்பட்டன. கழக அமைப்புச் செயலாளர் திரு.ஹென்றி தாமஸ் ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலாளர் திரு.எட்வின் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.