திருப்பூர், பல்லடத்தில் போக்குவரத்து சிக்னலில் தொங்கி வடமாநில இளைஞர் தற்கொலை மிரட்டல்
Apr 22 2021 4:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் அருகேயுள்ள பல்லடத்தில் போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மேல் ஏறி தலைகீழாக தொங்கி வட மாநில வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. இதனை கண்ட பொதுமக்கள் அவ்வழியே சென்ற கனரக லாரி ஒன்றை நிறுத்தி அதன் உதவியுடன் அந்த நபரை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், இவர் பீகாரை சேர்ந்தவர் என்பதும் தன் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறினார்.