கும்பகோணத்தில் டாஸ்மாக்பார் மேலாளர், வியாபாரி மோதல் - பெட்ரோல் குண்டுவீச்சு
Apr 22 2021 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணத்தில் டாஸ்மாக் பார் நிர்வாகத்தினருக்கும், தள்ளுவண்டி கடைக்காரருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, பார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கும்பகோணம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜான் செல்வராஜ் நகரில், மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. பார் மேலாளர் மாரிமுத்துவுக்கு, அங்குள்ள தள்ளுவண்டி வியாபாரி சேட்டு என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சேட்டுவின் நண்பர்கள், மாரிமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டதுடன், பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் மாரிமுத்து காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.