அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்-அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம்
Apr 22 2021 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. திருப்புறம்பயம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் கும்பகோணத்திலிருந்து சேலத்திற்கு தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது விருத்தாச்சலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லாத்தூர் அருகே சென்றபோது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரில் இருந்த அனைவரும் கதவைத்திறந்து வெளியே வந்து உயிர் தப்பினர்.