கிருஷ்ணகிரியில் நீதிபதியின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை - நீதிமன்ற வளாகத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்
Apr 22 2021 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரியில் நீதிபதியின் பாதுகாவலர் ஒருவர், நீதிமன்ற வளாகத்திலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கலைமதியின் பாதுகாவலராக இருந்தவர், ஆயுதப்படை காவலர் அன்பரசன். இவர், நேற்றிரவு வழக்கம்போல் வேலைக்கு வந்தார். இந்நிலையில், அன்பரசன் இன்று காலை நீதிமன்ற வளாகத்திலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். சம்பவ இடத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பண்டி கங்காதர் விசாரணை மேற்கொண்டார். தற்கொலை செய்துகொண்ட ஆயுதப்படை காவலர் அன்பரசுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகின்றன. பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம் தற்கொலைக்கு காரணமா? அல்லது குடும்ப பிரச்னையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.