ஊரடங்கு நேரங்களில் அவசியமின்றி வீட்டை விட்டு வெளி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை
Apr 22 2021 3:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா ஊரடங்கு நேரங்களில் அவசியமின்றி வெளியே வருபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னை காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்டோருக்கு முககவசம், சானிடைசர் உள்ளிட்ட உபகரணங்களையும் அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு நேரங்களில் அவசியமின்றி வெளி வருபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றினால் தொற்றில் இருந்து மக்கள் தப்பிக்கலாம் என கூறினார்.