மதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்த பொதுமக்கள் - சமூக இடைவெளி பின்பற்றப்படாததால் காற்றில் பறந்த கொரோனா தடுப்பு நெறிமுறைகள்
Apr 22 2021 2:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாநகராட்சிப் பள்ளியில் புதிதாக தடுப்பூசி மையம் தொடங்கப்பட்ட நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியின்றி குவிந்தனர்.
மதுரை ஷெனாய் நகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி மையம் செயல்படத் தொடங்கியுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக, இன்று காலை முதல் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது. கொரோனா தடுப்பூசி குறைவாகவே வந்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு செலுத்துவதில் ஆர்வம் காட்டும் சுகாதாரத்துறையினர், பொதுமக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாததால், கொரோனா பரவல் அதிகரிக்கும் என புகார் எழுந்துள்ளது.