ஈரோட்டில், பெற்ற பிள்ளைகளை பெற்றோரே நரபலி கொடுக்க திட்டமிட்டதாக புகார் : குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

Apr 22 2021 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோட்டில், பெற்ற பிள்ளைகளை தாய் சித்ரவதை செய்து நரபலி கொடுக்க முயற்சித்ததாக எழுந்த புகார் குறித்து, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி ராமலிங்கமும், அவரது மனைவி ரஞ்சிதாவும், தங்களது இரு பிள்ளைகளையும் நரபலி கொடுக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோரிடம் இருந்து தப்பித்து வந்து சிறுவர்கள் இருவரும், தங்களது தாத்தா மற்றும் பாட்டி உதவியுடன் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்திருந்தனர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தின் உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை செல்வராஜ் ஆகியோர், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசாரிடமும் வழக்கு விபரங்களை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ், குழந்தைகளிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர உரிய சாட்சிகளை நீதிமன்றத்தில் சமர்பிக்க போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00