கோவையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற மர்ம நபர்கள் கைது : 1.8 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்
Apr 22 2021 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற நபர்களை காவல்துறையினர், கைது செய்து அவர்களிடம் இருந்து 1 புள்ளி 8 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கேரளா மற்றும் கோவையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை சிலர் புழக்கத்தில் விடுவதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கேரள போலீஸ் தனிப்படையினர் கோவை வந்து கரும்புக்கடை, வள்ளல் நகர் பகுதியில் உள்ள அஸ்ரப் என்பவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் உக்கடம் அல்-அமீன் காலனி பகுதியில் உள்ள செய்யது சுல்தான் வீட்டில் கேரளா மற்றும் கோவை போலீசார் இணைந்து சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் 1 கோடி மதிப்புள்ள ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.