மதுரையில் சூறாவளி மற்றும் கனமழையால் பப்பாளி மரங்கள் சேதம் : அரசு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
Apr 22 2021 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அருகே சூறாவளி மற்றும் கனமழையால் சேதமடைந்த பப்பாளி மரங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் பப்பாளி மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் சூறாவளியால் பப்பாளி மரங்கள் உடைந்து விழுந்து சேதமடைந்துள்ளன. ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இயற்கை சீற்றத்தால் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.