கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக்கோரி போராட்டம்
Apr 22 2021 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி சுற்றுலாத்துறை சார்ந்த தொழிலாளர்கள் இன்று முதல் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பி மட்டுமே பல்லாயிரணக்கான குடும்பம் இருப்பதால், சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக கடையடைப்பு, மனித சங்கிலி, கஞ்சி தொட்டி திறப்பு போராட்டம் உள்ளிட்டவையில் ஈடுபட போவதாக கொடை மக்கள் வாழ்வாதார மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.