கன்னியாகுமரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 8 ஆண்டுகள் சிறை
Apr 22 2021 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கன்னியாகுமரி பேச்சிபாறையை சேர்ந்த கேசவன் என்பவர், 17 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், கேசவனுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.