தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Apr 22 2021 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுமெனவும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாகவும் இருக்குமெனவும் கூறப்பட்டுள்ளது.