தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று - அரசு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
Apr 22 2021 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் திரு. ராஜீவ் ரஞ்சன், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் திரு. ராஜீவ் ரஞ்சன், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவினருடன் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்தக் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளதா?, மேலும் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.