பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மனைவியை, சாலையிலேயே அரிவாளால் வெட்டி கொலை செய்த கொடூர கணவன் - தரங்கம்பாடி அருகே நடந்த பரபரப்பு சம்பவம்

Apr 22 2021 2:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில், பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மனைவியை, சாலையிலேயே அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

தரங்கம்பாடி தாலுக்கா அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட வாடகுடி காலனி தெருவை சேர்ந்த வீரமணி-மோகனாம்பாள் தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மோகனாம்பாள், தனது கணவரை விட்டு பிரிந்து, வாடகுடியில் தன் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்த மோகனாம்பாள், மாந்தை மெயின் ரோடு பாலம் அருகே வந்தபோது அவரது கணவர் வீரமணி வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில், மோகனாம்பாள், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், தப்பியோடிய கணவர் வீரமணியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி, கணவராலேயே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், வாடகுடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00