குன்றத்தூர் மாணவர் லோகேஷ் 1 நிமிடத்தில் 54 புஷ்-அப் எடுத்து சாதனை
Apr 12 2021 9:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவரது மகன் லோகேஷ் என்பவர் புஸ் அப்ஸ் எடுக்கும் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது, டைமண்ட் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்ட்சில் இடம்பெற்றுள்ளார்.
ஆன்லைன் மூலமாக நடைபெற்ற போட்டியில் 17 வயது இளைஞர் லோகேஷ் கடந்த கால சாதனையான ஒரு நிமிடத்தில் 31 புஸ் அப் அஸ் என்ற சாதனையை முறியடித்து 54 புஸ் அப் எடுத்து சாதனை படைத்துள்ளார்.