இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராணுவ வீரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
Mar 9 2021 5:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராணுவ வீரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் கீழசிந்தலைச்சேரியைச் சேர்ந்த ராஜ்குமார் தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதிக்கு இளம் பெண்ணை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராணுவ வீரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.