திண்டுக்கலில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் துணையோடு நிலத்தை அபகரிக்க சதி- குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
Mar 9 2021 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கலில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் துணையோடு நிலத்தை அபகரிக்க முயற்சி நடப்பதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் தீக்குளிக்க முயற்சித்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கன்னிமைக்கும் பட்டியை சேர்ந்த திரு . சக்திவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தை அவரது உறவினர்கள் சிலர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான பரமசிவம் துணையோடு அபகரிக்க முயன்றுவருகின்றனர். பாதிக்கப்பட்ட சக்திவேல் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.