டிடிவி தினகரனுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு - அ.ம.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி
Mar 9 2021 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.மயில்சாமி, துணைத்தலைவர்கள் திரு.அபு பக்கர், திரு.முல்லை எத்திராஜ், சென்னை மாவட்டத் தலைவர் திரு.பாலகிருஷ்னண் ஆகியோர், மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்தச் சந்திப்பின்போது, கழகப் பொறியாளர் அணிச் செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளருமான திரு. கரிகாலன் உடனிருந்தார்.
அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி திரு.குருநாதன், அக்கட்சியிலிருந்து விலகி, கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இந்தச் சந்திப்பின்போது, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.செந்தமிழன், தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு.எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா ஆகியோர் உடனிருந்தனர்.