தேர்தல் நடத்தை விதிகள் எனக்கூறி மதுரையில் காந்தி சிலையை மூடிய தேர்தல் அலுவலர்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி
Mar 9 2021 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேர்தல் நடத்தை விதிகள் எனக்கூறி, மதுரையில் மகாத்மா காந்தி சிலையை தேர்தல் அலுவலர்கள் துணியால் மறைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை துணியால் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் வேதனையடைந்துள்ளனர். மேலும், காந்தி சிலை அருகே இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையும் மூடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தாங்களே முன்வந்து, சிலைகளை மூடிய துணியை அகற்றினர். அரசியல் கட்சித்தலைவர்களின் உருவப்படங்கள் மறைக்கப்படாமல் இருப்பதை தேர்தல் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.