நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பசுமாட்டை திருடிச் சென்ற மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Mar 9 2021 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துகாளிப்பட்டி பகுதியில் பசுமாடு திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முனியப்பன் என்ற விவசாயி வீட்டில் கட்டி வைத்திருந்த பசுமாட்டை, மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, மர்மநபர்கள் மாட்டை அவிழ்த்து ஆட்டோவில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.